For Daily Alerts
Just In
மணல் லாரி மோதி 2 குழந்தைகள் பலி-தாய் படுகாயம்
சென்னை: சென்னை மேடவாக்கத்தில் மணல் லாரி ஏறி இரு குழந்தைகள் பலியாயினர்.
கங்கா என்பவர் தனது 8 வயது மகள், 4 வயது மகனுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது ஒரு அரைபாடி மணல் லாரி பின் பக்கமாக வந்தது.
இதில் அதன் பின்னால் நின்றிருந்த தாயும் குழந்தைகளும் டயரில் சிக்கி நசுங்கினர். இதில் இரு குழந்தைகளும் அந்த இடத்திலேயே பலியாயினர். கங்கா படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாரியின் டிரைவர் கவனக் குறைவாக லாரியை திடீரென பின் பக்கமாக இயக்கியதால் தான் இந்த சம்பவம் நடந்தது.
Comments
Story first published: Sunday, January 27, 2008, 14:16 [IST]