For Quick Alerts
For Daily Alerts
Just In
முன்னாள் இந்தோனேஷிய அதிபர் சுகர்தோ மரணம்
கடந்த 4ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மூன்று வாரமாக கோமா நிலையில் இருந்தார். 1961ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை அதிபராக இருந்த சுகர்தோவின் ஆட்சியில் தான் இந்தோனஷியா பொருளாதாரரீதியில் வளர்ச்சி அடைந்தது.
கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான சுகர்தோ தனது தேசத்தை மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு நெருக்கமானதாக மாற்றினார். ஆனால், இவரது ஆட்சியில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட. ஆட்சிக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலையானார்கள். மேலும் இவரது குடும்பத்தின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சுகர்தோவின் ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்து எழுந்து தேசம் முழுவதும் பெரும் போராட்டம் நடத்தியதால் தான் அவர் 1998ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.
Comments
Story first published: Sunday, January 27, 2008, 14:09 [IST]