For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய்-கேட்பாரற்று கிடக்கும் தமிழக தொழிலாளியின் உடல்

By Staff
Google Oneindia Tamil News


துபாய்: தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் துபாயில் இறந்து 2 மாதங்கள் ஆகியும் அவரது உடலை வாங்க எவரும் வரவில்லை என வேலி ஆஃப் லவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நாகப்பட்டணம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள தேரிழந்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் முத்து. துபாயில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2007 நவம்பர் 28ம் தேதியன்று நடந்த விபத்தில் மரணமடைந்து விட்டார். அவரின் உடலை கைப்பற்றிய அந்நாட்டு காவல்துறையினர் சவக்கிடங்கில் வைத்துள்ளனர். ஆனால் அவரின் உடலை வாங்க இதுவரை யாருமே தொடர்பு கொள்ளவில்லை.

இது குறித்து வேலி ஆஃப் லவ் என்ற தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களை தெரிவித்துள்ளது.

இறந்த தொழிலாளியின் முகவரி: பாஸ்கர் முத்து, எண்.4/145 ஜின்னா தெரு, பெருமாள் கோவில் வட்டம், தேரிழந்தூர், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு.

பாஸ்கர் முத்துவின் உறவினர்கள் 050-3090506 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X