கார்களின் விலையை உயர்த்த மாருதி சுசுகி திட்டம்
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து வகை மாருதி கார்களின் விலையையும் உயர்த்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுசுகி. இந்நிறுவனம் சமீபத்தில் டாடாவின் 1 லட்ச ரூபாய் கார் நானோ வருவதை முன்னிட்டு, மாருதி 800 காரின் விலையை மட்டும் சிறிது குறைத்து மற்ற மாடல்களின் விலையை உயர்த்தாமல் இருந்தது.
ஆனால் தற்போது உற்பத்தி விலை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து இதே விலைக்கு கொடுத்தால் லாபம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
ரூ.2000 முதல் ரூ.12000 வரை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த வருடம் புதிதாக 5 மாடல்களை அறிமுகம் செய்தது மாருதி சுசுகி.
நாட்டின் மொத்த கார் விற்பனையில் மாருதி தற்போது 50 சதவீதம் வகித்து வருகிறது. வரும் 2015ல் இதை 3 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications