பட்ஜெட் கடுமையாக இருக்கும்-சிதம்பரம் சூசகம்

வழக்கமாக மாத ஊதியதாரர்களை கசக்கிப் பிழியும் நிதியமைச்சர் என்ற புகழ் கொண்டவர் சிதம்பரம். ஏனென்றால் அது தான் வரி வசூலுக்கு எளிதான வழி. சம்பளத்தைத் தரும்போதே வரியைப் பிடித்துக் கொண்டு (Tax deducted at source-TDS) தருவார்கள்.
இந் நிலையில் வரப் போகும் பட்ஜெட்டில் சலுகைகள் எதையும் எதிர்பார்த்து விடாதீர்கள் என்பதை இப்போதே தெரிவித்துவிட்டார் சிதம்பரம். அவர் கூறுகையில்,
இன்னும் பட்ஜெட் வேலைகளை நான் தொடங்கவில்லை. ஆனால், பிப்ரவரி 29ம் தேதி நான் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் என்னிடம் நீங்கள் நிச்சயம் மிக அன்பாக இருக்கப் போவதில்லை என்றார்.
இதனால் வரி விதிப்புகள் கடினமாக இருக்கும் என்றே தெரிகிறது.
அதிக வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி:
இதற்கிடையே இந்திய பெட்ரோலியத்துறையிலும், விமான பராமரிப்புத் துறையிலும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உள்ள வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் இந்தத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கவுள்ளன.
டைட்டானியம் உள்ளிட்ட கனிமங்களை வெட்டியெடுக்கும் துறைகளில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications