தலித் மாணவர்களுக்கு நிபந்தனை-திக கண்டனம்
சென்னை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி பயில வங்கிக் கடனுதவியைப் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் வங்கிக் கடன் உதவியைப் பெற வேண்டுமானால் பிளஸ்டூவில் 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த உத்தரவால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் படிப்பும், எதிர்காலமும் பெரும் பாதிப்பை சந்திக்கும். உயர் கல்வியைக் கற்கும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications