புளோரிடா வாக்கெடுப்பில் ஹில்லாரி வெற்றி

வாஷிங்டன்: புளோரிடா மாகாணத்தில் நடந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை வாக்கெடுப்பில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மீண்டும் அவரது கை ஓங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய முதன்மை வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹில்லாரி கிளிண்டனுக்கும், பாரக் ஓபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.
ஹில்லாரி இதுவரை நியூ ஹாம்ப்ஷயர், நிவேதா ஆகியவற்றில் வெற்றி பெற்றிருந்தார். அயோவா மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் ஓபாமா வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சியில் ஜான் மெக்கெய்ன் மற்றும் மிட் ரோம்னிக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருவரும் தலா 3 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சிக்கான முதன்மை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஹில்லாரி கிளிண்டன் அபார வெற்றி பெற்றார்.
ஹில்லாரிக்கு 50 சதவீத வாக்குகளும், ஓபாமாவுக்கு 33 சதவீத வாக்குகளும், ஜான் எட்வர்ட்ஸுக்கு 14 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
ஹில்லாரிக்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளை அமெரிக்கர்களும், வெளிநாட்டு அமெரிக்கர்களும்தான்.
இதற்கிடையே, தொடர்ந்து 3வது இடத்திலேயே இருந்து வரும் ஜனநாயகக் கட்சியின் ஜான் எட்வர்ட்ஸ் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளார். நியூ ஆர்லியான்ஸில் நடைபெறவுள்ள பிரசாரத்தின்போது இந்த முடிவை அவர் அறிவிக்கவுள்ளார்.
எட்வர்ட்ஸுக்கு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை வெள்ளை அமெரிக்கர்கள் மத்தியில்தான் ஆதரவு அதிகம் உள்ளது. எனவே அவர் போட்டியிலிருந்து விலகினால் அது ஓபாமாவுக்கு சாதகமாகலாம் என கருதப்படுகிறது.
புளோரிடாவில் ஜான் மெக்கெய்ன் அபார வெற்றி:
இதற்கிடையே புளோரிடா மாகாண குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் ஜான் மெக்கெய்ன் அபார வெற்றி பெற்றார். அவருக்கு 36 சதவீத வாக்குகளும், ரோம்னிக்கு 31 சதவீத வாக்குகளும், ரூடி ஜியுலியானிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து ஜான் மெக்கெய்னுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ரூடி ஜூலியானி தெரிவித்துள்ளார்.
அடுத்து பிப்ரவரி 5ம் தேதி 22 மாகாணங்களுக்கு ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. சூப்பர் செவ்வாய் எனப்படும் இந்த நாளில் நடைபெறும் வாக்கெடுப்பின் இறுதியில் இருகட்சிகளின் சார்பிலும் அடுத்து யார் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications