குடிநீர் திட்டம்-நிதியுதவி பெற ஜப்பான் செல்லும் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு நிதியுதவி பெற உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் செல்ல இருப்பதாக முதல்வர் கருணாநிதி இன்று சட்டப்பேரவையில் கூறினார்.
ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கருணாநிதி பேசுகையில்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்க கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு ஜப்பானின் சர்வதேச கூட்டுறவுக்கான வங்கியின் ஒப்புதல் பெற உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அதிகாரிகளுடன் ஜப்பான் செல்கிறார்.
திமுக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு பெரிதும் உறுதுணையாக இருந்ததோடு ஜப்பானிய நிதியுதவி கிடைக்கவும் உதவியது.
ஏற்கனவே இந்த ஜப்பானிய வங்கிக் குழு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து திட்டம் குறித்த ஆய்வை நடத்தி முடித்துவிட்டது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications