எந்த இனத்தையும் கைவிட மாட்டோம்: மலேசிய பிரதமர்
சிங்கப்பூர்: மலேசியா வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு நாடு. எனவே நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள எந்த இனத்தையும் அரசு கைவிடாது என்று மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறியுள்ளார்.
மலேசிய இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் படாவி. அவர் பேசுகையில்,
மலேசியாவின் 2வது பிரதமராக இருந்த, மறைந்த துன் அப்துல் ரஸ்ஸாக் ஹூசேன் புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியபோது, நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து இனத்தவரும் முக்கியம். யாரையும் அரசு கைவிடாது என்று கூறியிருந்தார். அந்த உறுதிமொழியைத்தான் எனது அரசும் கடைப்பிடித்து வருகிறது.
மலேசியாவில் வாழும் எந்த சமுதாயத்தையும் அரசு கைவிடாது, ஒதுக்காது, புறக்கணிக்காது. மலேசியாவின் வளர்ச்சியில் வம்சாவளி இந்தியர்களின் பங்கு முக்கியமானது. அவர்களின் குறைகளை, பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆர்வமாக உள்ளது என்றார் படாவி.
சமீபத்திய இனச் சிக்கல்களுக்குப் பின் இவ்வளவு தூரம் படாவி இறங்கி வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பேச்சுவார்த்தைக்கு முன்வரும் ஹிண்ட்ராப்:
இதற்கிடையே, ஆளும் ஐக்கிய மலாய் தேசிய கழகத்தின் தலைமையிலான பாரிசான் நேஷனல் கூட்டணியுடன், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தலைவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழு (ஹிண்ட்ராப்) முன்வந்துள்ளது.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராப் அமைப்பு தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியது. இதை சட்டவிரோதமாக அறிவித்த மலேசிய அரசு பல தமிழர்களைக் கைது செய்தது.
பின்னர் டிசம்பர் 13ஆம் தேதி ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் எம்.மனோகரன், வி.கணபதிராவ், ஆர். கங்காதரன், வி. வசந்தகுமார் ஆகியோரை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
அவர்கள் அனைவரும் தற்போது முகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எந்தவித விசாரணையும் இன்றி அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆளும் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் வைத்தியமூர்த்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் தற்போது மலேசிய அரசின் நடவடிக்கையிலிருந்து தப்ப வெளிநாட்டில் தங்கியுள்ளார்.
வைத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்தும், ஹிண்ட்ராப் நிர்வாகிகள் விடுதலை தொடர்பாகவும் அரசுத் தரப்புடனும், அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications