விமான நிலையத்தில் 5 கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது-சிபிஐ அதிரடி
ஹைதராபாத்: வெளிநாட்டில் இருந்து ஏராளமான இந்திய, வெளிநாட்டு கரன்சிகளுடன் ஹைதராபாத் வந்திறங்கிய கஸ்டம்ஸ் அதிகாரிகள் 5 பேரை சிபிஐ கைது செய்தது.
ஆந்திராவில் பணியாற்றும் இந்த அதிகாரிகள் வெளிநாடுகளில் சுற்றிவிட்டு இன்று காலை விமானம் மூலம் ஹைதராபாத் வந்திறங்கினர். கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்பதால் விமான நிலையத்தில் அவர்களது பேகேஜ்களை சுங்கத்துறையினர் சோதனையிடவில்லை.
இதையடுத்து விமான நிலையத்தில் கிளியரன்ஸ் முடிந்து கிளம்பிய இவர்களை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களது பெட்டிகளை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டபோது ஏராளமான இந்திய, வெளிநாட்டு போலி கரன்சி நோட்டுகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மது பாட்டில்கள் இருந்தன.
இவர்களது நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்ததால் கடந்த சில காலமாகவே சிபிஐ இவர்களை கண்காணித்து வந்துள்ளது. இந் நிலையில் இன்று கையும் களவுமாகப் பிடித்துள்ளது.
கஸ்டம்ஸ் அதிகாரிகளிடமே கணக்கில் வராத ஏராளமான கரன்சி நோட்டுக்கள் சிக்கியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.