For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீடிக்கு தீப்பெட்டி தராததால் அரிவாள் வெட்டு

By Staff
Google Oneindia Tamil News


நெல்லை: நெல்லை சுத்தமல்லி அருகே பீடி பற்ற வைக்க தீப்பெட்டி கொடுக்காத வாலிபருக்கு அரிவாளால் வெட்டி விழுந்தது.

நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள அத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று இவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி என்பவர் குடிபோதையில் வந்தார். தங்கதுரையை நிறுத்தி, பீடி பத்த வைக்கணும், தீப்பெட்டி கொடு என்று கேட்டார்.

அப்போது தங்கதுரை தீப்பெட்டி இல்லை என்று கூறி தொடர்ந்து வந்தார். ஆனாலும் விடாமல் விரட்டி வந்த இசக்கிபாண்டி, நான் தீப்பெட்டி கேட்கிறேன். நீ தர மறுக்கிறாயா என்று கூறி தங்கதுரையை அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த தங்கதுரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X