துபாயின் புதிய இளவரசர்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயின் புதிய இளவரசராக ஷேக் ஹம்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் துபாய் மன்னரான ஷேக் முகம்மத் பின் ரசத் அல்-மஹ்தூமின் மகன் ஆவார். இதற்கான உத்தரவை ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகம்மத் வெளியிட்டார்.
பிரிட்டனின் சாண்ட்ஹர்ஸ்ட் ராணுவ அகாடமியில் பயின்றவரான ஹம்தான், இப்போது துபாயின் பொதுத்துறை நிறுனங்களை கண்காணிக்கும் உயர் மட்டக் கவுன்சிலின் தலைவராக உள்ளார்.
அதே போல தனது இன்னொரு மகனான ஷேக் மஹ்தூம் பின் முகம்மத் மற்றும் தனது சகோதரரான ஷேக் ஹம்தன் பின் ரசத் ஆகியோரை துணை ஆட்சியாளர்களாகவும் மன்னர் நியமித்துள்ளார்.












Click it and Unblock the Notifications