கொழும்பு: குண்டுவெடிப்பில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.
நேற்று மத்திய இலங்கையின் தம்புலா என்ற இடத்தில் பேருந்தில் குண்டு வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று கொழும்பில் இரட்டை குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
முதலில், தெகிவாலா என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் 10 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து பிற்பகலில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெண் மனித குண்டு வெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். இதனால் ரயில் நிலையம் பெரும் பரபரப்பில் மூழ்கியது.
நாளை இலங்கையில் 60வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து குண்டு வெடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications