கூடங்குளம் அருகே கடற்கரையில் வெடிகுண்டு குவியல்

Subscribe to Oneindia Tamil


கூடங்குளம்: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கூத்தங்குளி என்ற இடத்தில் கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குளியில் சமீபத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையை மோதல் ஏற்பட்டது. இதில் ரீகன் என்ற மீனவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக கணேசன், காந்தி, வினோ ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களை கூடங்குளம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது அவர்கள், ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை கடற்கரை மணலில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார்கள்.

உடனே போலீசார் விரைந்து சென்று அவர்கள் கூறிய இடத்தில் மணலை தோண்டி சோதனை நடத்தியபோது அங்கு பிளாஸ்டிக் பைககளில் 38 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.

நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக அவர்கள் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தக் கிராமத்தில் வெடிகுண்டுகள் இவ்வளவு பெரிய அளவில் சிக்கியது இது முதல் முறையல்ல. கடந்த 1999ம் ஆண்டு நடந்த மீனவர்களுக்கிடையிலான மோதலைத் தொடர்ந்து அங்கு 2500 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+