பீகார் திருடன் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பீகாரைச் சேர்ந்த செல்போன் திருடன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த டிசம்பர் மாதம் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதில் தொடர்புடைய பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
இதில் கைது செய்யப்பட்ட பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டம் ஜேகதாம்மாள் நகரை சேர்ந்த தீனதாயாள் சர்மா என்பவரது மகன் சந்தோஷ்குமார் ஜெய்வால் என்பவரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செயது சிறையில் அடைக்க கலெக்டர் பழனியாண்டி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications