திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் ஓட்டம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயமானார். அவரை வாலிபர் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா. இவரது மகள் அய்யம்மாள். முறம்பு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்த அருவன்குளத்தை சேர்ந்த குருசாமி சிவகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் அய்யமாளுக்கு பெற்றொர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தனர்.
இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அய்யம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து சண்முகையா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை 10 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயுடன் சிவகுமார் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி விசாரணை நடத்தி காதலர்களை தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications