For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரண மாணவி: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் 10 வயது சிறுமி, மாணவி. எனது 50 ஆண்டுகளுக்கு முன்பு எனது வாழ்க்கையில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் கூறவா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் வாதம் நடந்தது. அப்போது நான் உதவிப் பேராசிரியராக இருந்தவன்தான். அதை தாழ்வாக நினைக்கவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் பேசலாமா என்று கேட்டார்.

இதுகுறித்து இப்போது பதில் அளித்துள்ளார் ஜெயலலிதா. அவர் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், நிதியமைச்சர் புகாருக்கு நான் அப்போதே பதில் கூற நினைத்தேன். ஆனால் அதை விட முக்கியமான பிரச்சினைகள் இருந்ததால், அதை அப்போது பேச முடியாமல் போய் விட்டது. இப்போது அதைக் கூறுகிறேன்.

எனது புகாருக்கு நிதியமைச்சர் பதிலளிக்கையில், பச்சையப்பன் கல்லூரியில் நான் உதவிப் பேராசிரியராகத்தான் இருந்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நான் பேசலாமா என்றார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நான் 10 வயது சிறுமி, மாணவி. சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். இதில் எந்த ரகசியமும் இல்லை.

இப்போது நான் கேட்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் என்ன நிலையில் இருந்தார்கள், என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை பற்றி நான் கூறலாமா என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X