அண்ணா நினைவு நாள்: கருணாநிதி, தலைவர்கள் அஞ்சலி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 39வது நினைவு நாளையொட்டி முதல்வர் கருணாநிதி உட்பட ஏராளமான தலைவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சேப்பாக்கத்தில் இருந்து இன்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அண்ணா நினைவிடத்துக்கு காலை 8 மணிக்கு பேரணியாக சென்றனர்.
பின்னர் அண்ணா சமாதியில் முதல்வர் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார். எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் தொடர்ந்து மரியாதை செலுத்தினர்.
ஜெ. வரவில்லை:
அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா வரவில்லை.
விஜயகாந்த், சரத்குமார் அஞ்சலி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் தனது கட்சி தலைமை கழகத்தில் உள்ள அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியினருடன் அண்ணா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்ற கழகத் தலைவர் ஜெகத் ரட்சகன், பாஜக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அண்ணா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications