Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை இன்று முடிவு

Subscribe to Oneindia Tamil

Petrol pump
டெல்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது தொடர்பாக இன்று நடைபெறுவதாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவிருந்ததால் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது.

இந்த இரு மாநில தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் அந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

கடந்த வியாழக்கிழமை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இக்குழுவில் உள்ள 7 அமைச்சர்களில் 4 அமைச்சர்கள் மட்டுமே இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த இக்குழு, இது குறித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

இக்குழுவின் பரிந்துரையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2ம், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று கூட்டம் நடைபெறவில்லை. இந்த வார இறுதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பெட்ரோல், டீசல், எல்பிஜி, மண்ணெண்ணை ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ. 71 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 10.57ம், டீசலுக்கு 11.56 ரூபாயும், மண்ணெண்ணைக்கு ரூ. 19.89 ரூபாயும், காஸ் சிலிண்டருக்கு ரூ. 331ம் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

்கு ரூ. 2ம், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று கூட்டம் நடைபெறவில்லை. இந்த வார இறுதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பெட்ரோல், டீசல், எல்பிஜி, மண்ணெண்ணை ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ. 71 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 10.57ம், டீசலுக்கு 11.56 ரூபாயும், மண்ணெண்ணைக்கு ரூ. 19.89 ரூபாயும், காஸ் சிலிண்டருக்கு ரூ. 331ம் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+