இலங்கை: சுதந்திர தினத்தன்று குண்டுவெடித்து 13 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் சுதந்திர தினமான நேற்று இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையின் 60வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் இலங்கையிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெலி ஒயா என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்பில் சிக்கியது. இதில் பயணம் செய்த ராணுவ வீரர்களில் 12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் தென்கிழக்கு பகுதியில் உள்ள புத்தலா என்ற இடத்தில் ராணுவ டிராக்டர் ஒன்று குண்டுவெடிப்பில் சிக்கியது. இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
இரண்டு இடங்களிலும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications