கந்தஹார் விமானக் கடத்தல் வழக்கு - 3 பேருக்கு ஆயுள்

அப்துல் லத்தீப் ஆதம் மொமீன் என்கிற அப்துல் ரஹ்மான் படேல், யூசுப் நேபாளி, தலிப் பூஜைல் ஆகிய அந்த மூவருக்கும் பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இந்தர்ஜித் சிங் வாலியா நேற்று தண்டனை விதித்தார்.
3 பேரில் லத்தீப்புக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ கோரியிருந்தது. இருப்பினும் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், லக்னோ மீது பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் காத்மாண்டு நகரிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தினர். பின்னர் விமானம் கந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டது. கந்தஹார் விமான நிலையத்தில் விமானம் ஐந்து நாட்களுக்கு வைக்கப்பட்டிருந்தது.
இப்ராகிம் அத்தார், சன்னி அகமது குவாஸி, சையத் என்கிற டாக்டர், மிஸ்த்ரி என்கிற போலா, வர்மா என்கிற ஷகீர் ஆகிய ஐந்து பேர்தான் விமானத்தைக் கடத்தினர்.
விமானத்தை விட வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். இதை இந்திய அரசு ஏற்று விடுவித்தது. அஸாருடைய சகோதரர்தான் இப்ராகிம் அத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து விமானத்தை தீவிரவாதிகள் விடுவித்தனர். மேற்கண்ட ஐந்து தீவிரவாதிகளுக்கும், நேற்று தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் தங்க இடம் கொடுத்தது, போலி பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தது, டிக்கெட் எடுத்துக் கொடுத்தது, ஆயுதங்கள், வெடிபொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி வாலியா, வேறு ஒரு பிரிவில் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தார். இன்னொரு பிரிவின் கீழ் அவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதிக்கபப்ட்டது. மேலும் 342வது பிரிவின் கீழ் அவர்களுக்கு தலா 7 ஆண்டு தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.
3 பேரின் தண்டனையையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அவர்களின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications