இலங்கையின் புகார் தவறானது - மீனவர்கள் மறுப்பு

தமிழக மீனவர்கள் 400க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கொண்டு நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்வதாகவும் இலங்கை கடற்படை கமாண்டர் டி.கே.பி.தசநாயகே புகார் தெரிவித்தார்.
ஆனால் இலங்கை அரசு கூறியுள்ள இந்த புகாரை மீனவர்கள் சம்மேளனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், விடுதலைப்புலிகளுக்கு மீனவர்கள் உதவி செய்வதாகவும், இலங்கை கடற்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இலங்கை அரசு பொய் சொல்கிறது.
மீனவர்களின் உரிமைகளை பறிக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது. அதற்காக எங்கள் மீது இப்படி பொய்யான தகவல்களை பரப்புவதே இலங்கையின் உள்நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கையின் புகார் குறித்து ராமேஸ்வரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மீனவர்கள் தரப்பில் இலங்கையின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இன்று நடந்த விசாரணையைத் தொடர்ந்து இயந்திரப் படகுகள் எதுவும் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications