இலங்கையின் புகார் தவறானது - மீனவர்கள் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Rmeswaram coastal area
ராமேஸ்வரம்: விடுதலைப்புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்ததாக இலங்கை அரசு கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று மீனவர்கள் சம்மேளன செயலாளர் என்.ஜே.போஸ் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் 400க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கொண்டு நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்வதாகவும் இலங்கை கடற்படை கமாண்டர் டி.கே.பி.தசநாயகே புகார் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை அரசு கூறியுள்ள இந்த புகாரை மீனவர்கள் சம்மேளனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், விடுதலைப்புலிகளுக்கு மீனவர்கள் உதவி செய்வதாகவும், இலங்கை கடற்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இலங்கை அரசு பொய் சொல்கிறது.

மீனவர்களின் உரிமைகளை பறிக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது. அதற்காக எங்கள் மீது இப்படி பொய்யான தகவல்களை பரப்புவதே இலங்கையின் உள்நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கையின் புகார் குறித்து ராமேஸ்வரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மீனவர்கள் தரப்பில் இலங்கையின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்று நடந்த விசாரணையைத் தொடர்ந்து இயந்திரப் படகுகள் எதுவும் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+