For Daily Alerts
Just In
தலைமைச் செயலகத்துக்கு ஊர்வலம் - சட்ட மாணவர்கள் கைது
சென்னை: சென்னையில் இன்று தலைமைச் செயலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு சமீபத்தில் தாழ்த்ப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வேண்டும் என்றால் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை வாபஸ் பெறக் கோரி இதற்கான மனுவை தலைமைச் செயலகத்துக்கு எழும்பூரில் இருந்து ஊர்வலமாக சென்று கொடுக்க முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் எழும்பூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.
Comments
Story first published: Wednesday, February 6, 2008, 18:45 [IST]