வன்முறை தவறு - ராஜ் தாக்கரேவுக்கு நக்மா கண்டனம்

லக்னோ வந்த நக்மா, அங்கு காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பையில் வட இந்தியர்களைக் குறி வைத்து நடந்த தாக்குதல் மிகவும் சோகமானது. சட்டத்தை யாரும் தங்களது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வன்முறையால் எந்தத் தீர்வையும் அடைந்து விட முடியாது.
மும்பை அனைவருக்கும் சொந்தமானது. பிராந்திய அடிப்படையில் யாரும் அதைப் பிரிக்க முயலக் கூடாது என்றார் நக்மா. ராஜ் தாக்கரேவின் பெயரை நேரடியாக அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல்களில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நக்மா பதிலளிக்கையில், ஒரு நடிகையாக, இப்போது காங்கிரஸ் உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்யவே எப்போதும் விரும்பியுள்ளேன். கட்சி எனக்கு என்ன உத்தரவிட்டாலும் நிறைவேற்றத் தயார். நான் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் தீர்மானிப்பார் என்றார்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் எம்.பியும், கட்சிப் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி மிகச் சிறப்பான முறையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பாராட்டினார் நக்மா.












Click it and Unblock the Notifications