ஆட்குறைப்பில் டிசிஎஸ்?: மறுக்கிறார் ராமதுரை
Subscribe to Oneindia Tamil

டாலரின் மதிப்பு சரிந்து வருவதையடுத்து ஊழியர்களின் ஊதியத்தில் கை வைத்தது டிசிஎஸ். வேரியபில் டி.ஏவைக் குறைத்து ஊதியத்தைக் குறைத்தது. இந் நிலையில் ஊழியர்களையும் குறைக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்பட்டது.
முதல் கட்டமாக பணியில் திருப்தியில்லை என்று கூறி 500 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை ராமதுரை மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
சரியாக பணி புரியாத ஊழியர்களை நீக்குவது இயற்கையானது. டிசிஎஸ்சில் இது எப்போதும் நடக்கக் கூடியது தான். இது புதிதில்லை. 500 ஊழியர்களின் பணித்திறன் போதுமானதாக இல்லாததால் வேறு வேலையை தேடும்படி 10 மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்திவிட்டோம்.
இது 2,3 வருடத்துக்கு ஒருமுறை நடக்கக் கூடியது தான். இந்த ஊழியர்கள் பணித்திறனை அதிகரித்துக் கொள்ள போதுமான கால அவகாசம் தந்து, அதிலும் தேறாதவர்களைத் தான் நீக்குகிறோம். 2 ஆண்டுகளுக்கு முன் 200 பேரை வேறு வேலைகளைத் தேடிக் கொள்ளச் சொன்னோம் என்றார்.












Click it and Unblock the Notifications