அரசு பேருந்து ஜப்தி - பயணிகள் ஓட்டம்
மதுரை: மதுரையில் பயணிகளோடு நின்ற அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
மதுரை கொடிக்குளம் புதூரைச் சேர்ந்த முத்துக்கனி என்பவரது மகன் சங்கரபாண்டியன். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2000 - ம் ஆண்டு பள்ளி முடிந்து சர்வேயர் காலனி பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மாணவண் மீது வேகமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து இறந்து போனார்.
இதற்கு நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை முத்துக்கனி, தாய் பேச்சி ஆகியோர் மதுரை தலைமை மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட மாணவண் குடும்பத்திற்கு போக்குவரத்து கழகம் ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொடுக்க 2005 ம் ஆண்டு நீதி மன்றம் உத்திரவிட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தியது. இதனால் முத்துக்கனி மீண்டும் நீதி மன்றத்திற்கு சென்றார்.
முத்துக்கணிக்கு போக்குவரத்து கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ 2 லட்சத்து 70 ஆயிரம் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் போக்குவரத்து கழகம் செயல்படுத்தவில்லை.
இதனால் அதே நீதி மன்றத்தில் முத்துக்கனி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் மனுதாரர்கள், நீதி மன்ற ஊழியர்கள் ஆகியோர் நேற்று மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு சென்றனர். ஆங்கு ஆரப்பாளையம் செல்ல பயணிகளுடன் இருந்த அந்த டவுன் பஸ்சை ஜப்தி செய்ய வந்துள்ளதாக நீதிமன்ற ஊழியர்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கூறினர். இதை கேட்டு அலறி அடித்து பஸ்ஸில் இருந்த பயணிகள் இறங்கினர்.
பின்பு உயர் அதிகாரிகள் வந்து நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சு வார்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications