பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து 8 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் 3 ராணுவ ஜெனரல்களும் 5 வீரர்களும் பலியாயினர்.
தீவிரவாதத்துக்கு பேர் போன வசீர்ஸ்தான் பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இப் பகுதி பழங்குடியினர் வசிக்கும் சுயாட்சி கொண்ட மாகாணமாகும்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பின்லேடனின் ஆதரவாளர்களான பழங்குடியின படைகளுக்கும் இடையே இங்கு அவ்வப்போது இங்கு மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ள பைலட் தெரிவித்ததாக ராணுவம் கூறியுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களில் தெற்கு வசீர்ஸ்தான் மாகாணத்தின் ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜாவெத் சுல்தானும் அடக்கம். மேலும் 2 பிரிகேடியர் ஜெனரல்களும் பலியாகியுள்ளனர்.