சிபிஐ காவலில் அமீத் குமார் - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சிறுநீரக மோசடி மன்னன் டாக்டர் அமீத் குமார் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வருகிற 22ம் தேதி வரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
டெல்லி குர்கான் அருகே 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை குறைந்த விலைக்குப் பெற்று லட்சக்கணக்கில், வெளிநாட்டினருக்கு விற்று மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்த டாக்டர் அமீத்குமார் வியாழக்கிழமை நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் சிபிஐ இறங்கியது. இருப்பினும் நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு அமீத் குமாரை கொண்டு வர கால தாமதமாகும் என கூறப்பட்டது.
இதையடுத்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நேபாள அரசை சிபிஐ தொடர்பு கொண்டு அமீத்குமாரை இந்தியாவிடம் ஒப்படைக்க முறைப்படி கோரிக்கை விடுத்தது. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகமும், நேபாள அரசைத் தொடர்பு கொண்டு விரைவில் அமீத்குமாரை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இந்த முயற்சிகளின் விளைவாக நேற்று மாலை சிபிஐ அதிகாரிகளிடம் அமீத்குமார் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து தனி விமானம் மூலம் உடனடியாக அவரை டெல்லிக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
இரவு 7 மணியளவில் அமீத் குமார் டெல்லி கொண்டு வரப்பட்டார். டெல்லி கொண்டு வரப்பட்டதும் உடனடியாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
சிபிஐ தலைமை அலுவலகத்தில் அமீத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சீவ் ஜெயின் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிபதி ஜெயின், வருகிற 22ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து அமீத்குமாரை விசாரிக்க அனுமதி அளித்தார்.
அமீத் குமார் மீது பயங்கர ஆயுதங்களால் வேண்டும் என்றே காயம் ஏற்படுத்துவது (ஐபிசி 326), தவறான செயல் (ஐபிசி 342), மோசடி (ஐபிசி 420), கிரிமினல் சதி (ஐபிசி 120பி) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதவிர 1994ம் ஆண்டைய மனித உறுப்பு மாற்ற சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications