லிபியாவில் தவிக்கும் 26 தமிழர்களை மீட்க நடவடிக்கை: காங். எம்.பி
காரைக்குடி: லிபியாவில் தவிக்கும் 26 தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலை பார்ப்பதற்காக லிபியா சென்ற மதுரை மற்றும் மேலூரைச் சேர்ந்த 26 பேர் அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இவர்கள் அனைவரையும் கணேசன் என்ற ஏஜென்ட் மாதத்திற்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.
அவர் மீது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் புகார் கொடுத்துள்ளனர். கணேசன் இதே போல் மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.85 ஆயிரம் பணம் வாங்கி ஏமாற்றி அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர்களுக்கு லிபியாவில் தினமும் 20 மணிநேரம் வேலை பார்த்தால் மட்டுமே ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு செல்ல ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர்கள் அங்கு கைது செய்யப்பட்டால் நெருக்கடியான நிலையை சந்திக்க நேரிடும் என்றார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications