பாக். தற்கொலைப்படை தாக்குதல் 20 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டின் அவாமி தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியில் தற்கொலைப்படையினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் உட்பட 20 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூட்டோ கொல்லப்பட்டதற்கு பின்னர் அரசியல் கட்சியினர் மீது குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.