விமானக் கடத்தல் திட்டம் முறியடிப்பு-ஏர் டெக்கான் ஊழியர் கைது
குவஹாத்தி: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்த திட்டமிட்ட உல்பா தீவிரவாதிகளுக்கு உதவிய ஏர்-ெடக்கான் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.
மத்திய அரசுடன் பேச்சு நடத்த உல்பா உருவாக்கிய அமைப்பு பீயூப்பிள்ஸ் கன்சல்டேடிவ் குரூப் (பிசிஜி). இந்த அமைப்புக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந் நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தும் சதித் திட்டத்தில் உல்பா இறங்கியது.
இதற்காக பிசிஜி அமைப்பைச் சேர்ந்த லசித் பர்டோலாய் என்பவர் மூலமாக ஏர்-டெக்கான் நிறுவன ஊழியர் ஒருவரை உல்பா வளைத்தது. இது குறித்து அஸ்ஸாம் போலீசாருக்கு ரகசிய தலைவர் கிடைக்கவே ஏர் டெக்கான் ஊழியரான சுமன் தத்தா என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் பர்டோலாயும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் திட்டத்துக்கு அஸ்ஸாமின் முன்னணி வழக்கறிஞரான நிகிபுர் சமான் உள்ளிட்ட பலரும் உதவி வந்ததும் தெரியவந்துள்ளது.
மனோஜ் தமுளி என்ற உல்பா தீவிரவாதி தந்த தகவல்களின் அடிப்படையில் இந்த சதித் திட்டம் போலீசாருக்கு தெரியவந்தது.
இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்ல உல்பா திட்டமிட்டிருந்ததாக அஸ்ஸாம் மாநில டிஜிபி சர்மா தெரிவித்துள்ளார்.
விமானக் கடத்தல் தொடர்பான பயிற்சியை மனோஜூக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயிடம் பெற்றுள்ளான். இந்த கைதுகளைத் தொடர்ந்து மத்திய உளவுப் படையின் சிறப்பு டீம் அஸ்ஸாம் விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications