ஒகனேக்கலில் கன்னட அமைப்பினர் ரகளை

வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் ஒகனேக்கலையே தங்களது மாநிலத்திற்குச் சொந்தமானதாக உரிமை கொண்டாடி பல கன்னட அமைப்புகள் அவ்வப்போது போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக வனத்துறை அதிகாரிகள் அத்துமீறி தமிழகப் பகுதிக்குள் நுழைந்து சர்வே பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கடந்த 2005ம் ஆண்டு ஒகனேக்கல் உரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பும் கர்நாடகத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் ஒகனேக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தம், அங்கு தமிழக அரசு எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று திமிராக கூறி வருகிறது.
இந் நிலையில் இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் மாடு கொட்டாய் என்ற இடத்தில் கூடினர். இது கர்நாடக எல்லைக்குள் உள்ளது. அங்கிருந்து வீரபத்ரன் என்பவர் தலைமையில் தமிழக எல்லைக்குள் நுழையும் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவர்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அங்கு கர்நாடக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல தமிழக எல்லைக்குள் நுழைந்தால் பிடிப்பதற்காக தமிழக எல்லையிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மஞ்சள், சிவப்பு நிறத்திலான கர்நாடக கொடியோடு (மாநிலத்திற்கு கொடி இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது) ஆவசேமாக அவர்கள் ஊர்வலம் கிளம்பினர். தண்ணீரில் இறங்கி தமிழக பகுதிக்குள் வர அவர்கள் முயன்றனர்.
இதையடுத்து கர்நாடக போலீஸார் அவர்களை கைது செய்தனர். சிலர் வலுக்கட்டாயமாக தண்ணீரில் நீச்சலடித்து போக முயன்றனர். அவர்களை அப்படியே குண்டுக் கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தப் பதட்டம் காரணமாக புகழ் பெற்ற தொங்கு பாலத்திற்கு தமிழக அதிகாரிகள் சீல் வைத்து மூடி விட்டனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.
கர்நாடகத்தினரின் இந்த ரகளை அடிக்கடி தொடருவதைக் கண்டித்து பரிசல்காரர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரிசல்களும் ஓடவில்லை.












Click it and Unblock the Notifications