நர்சிடம் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
நெல்லை: நெல்லயில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற நர்சிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை ஜங்ஷன், மதுரை ரோட்டில் உள்ள பாலபாக்கிய நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி பார்வதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.
இவர் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
கொள்ளை போன சங்கிலியின் மதிப்பு ரூ.50,000 ஆகும்.
எஸ்.ஐ. வீட்டில் கொள்ளையடித்தவர் கைது:
தூத்துக்குடியில் எஸ்.ஐ. வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சங்கப்பேரி வீ்ட்டு வசதி வாரிய குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வசித்து வருகிறார்.
கடந்த ஜனவரி 14ம் தேதியன்று இவரது வீட்டில் இருந்த ரூ 6 லட்சம் ரொக்கப் பணம், 70 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடன் கொள்ளையடித்து சென்று விட்டான்.
இது குறித்து மாரியப்பன் போலிசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் குற்றாலத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் அவரிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications