3 வயதில் 30 வகை யோகாசனம்-சாதனை சிறுவன்
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 3 வயது சிறுவன் 30 வகையான யோகாசான பயிற்சிகளை செய்வது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் காளித்துரை. இவர் அப்பகுதியில் யோகாசன பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது மகன் உதயகுமார். அங்குள்ள பகுதியில் எல்கேஜி படித்து வருகிறான். காளித்துரை தனது மகன் உதயகுமாருக்கும் பயிற்சி அளிதது வருகிறார்.
சிறுவன் உதயகுமார், பத்மாசனம், வஜ்ராசனம், கோமுகாசனம், சப்த வஜ்ராசனம், மச்சானம், கலாசனம், பஜ்சிநமோத்தாசனம் உள்பட 30 வகை ஆசனங்களை செய்கிறான். இது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
இது குறித்து ஆசிரியர் காளித்துரை கூறும்போது, யோகாசன பயிற்சிகள் முலம் வளரும் குழந்தைகளின் மனதில் ஆரோக்கியம், விட்டு கொடுக்கும் மனோபான்மை, மன தைரியம், தன்னம்பிக்கை, சாதிக்க விரும்புதல் போன்றவை உருவாகிறது.
எனது மகனை 6 வயதில் 500க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கின்னஸில் இடம் பெற வைப்பதே எனது லட்சியம் என்றார்.