பிரதமருக்கு கெடு, ஸ்டாலினுக்கு மிரட்டல்-மர்ம கடிதத்தால் பரபரப்பு!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கிக்கு வந்த ஒரு மர்மக் கடிதத்தில் பிரதமருக்கு கெடுவும், அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை சத்தியமூர்த்தி பஜாரில் உள்ள கனரா வங்கி கிளை மேலாளருக்கு இந்தக் கடிதம் வந்துள்ளது.
அதில், கனரா வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது கொலை பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவை பிரித்து முஸ்ஸீம் நாட்டை உருவாக்க வேண்டும், இல்லையெனில் லோக்சபா, தமிழக சட்டசபை ஆகியவை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும், இதற்கெல்லாம் பிரமருக்கு மூன்று மாதம் கெடு விதிப்பதாகவும் சம்பந்தா சம்பத்தமில்லாமல் மென்டல்தனமாக எழுதப்பட்டிருந்தது.
இப்படிக்கு பிரபு தாஸ், ராஜீவ் காந்தி நகர், விருதுநகர் என்று முடிந்தது அந்தக் கடிதம்.
இது குறித்து வங்கி மேலாளர் உடனே டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் கடித்ததை கைப்பற்றினர் வங்கியில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
அந்த கடிதம் அனுப்பியவனைப் பிடிக்க தனிப்பபடை அமைக்ப்பட்டுள்ளது.