நக்ஸல்கள் தாக்கிய அதியமான்கோட்டை காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்
தர்மபுரி: நக்ஸல்களிடம் துப்பாக்கிகள், வாக்கிடாக்கியை பறி கொடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் காவல் நிலையத்துக்குள் நள்ளிரவில் புகுந்த நகஸ்லகள் அங்கு பாதி தூக்கத்தில் இருந்த ஒரு ஒரு காவரை மிரட்டி துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த லாக் அப் அறையை உடைத்து 6 துப்பாக்கிகளையும் காவலர் வைத்திருந்த வாக்கி டாக்கியையும் பறித்துக் கொண்டு சென்றனர்.
அந்த நேரத்தில் பணியில் இருந்திருக்க வேண்டிய மற்ற 3 காவலர்களும் இரவு நேரக் கடைகளில் மாமூல் வாங்கச் சென்றுவிட்ட நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் ராஜமாணிக்கம், ராஜா, போலீஸ்காரர் சுப்பிரமணி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த காவல் நிலையத்தின் இன்னொரு சப்-இன்ஸ்பெக்டரான பிரபாவதி, துணை எஸ்பி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். புதிய சப்-இன்ஸ்பெக்டராக கலைவாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் எஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூண்டோடு 'டிரான்ஸ்பர்':
இந் நிலையில் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 18 போலீஸ்காரர்களும் ஒட்டுமொத்தமாக ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். (இங்கு மாமூல் வசூலுக்கு வழியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலை-மாலை எக்ஸர்ஸைஸ் செய்ய வேண்டும், எங்காவது கலவரம் நடந்தால் வேனில் கொண்டு போய் இறக்கிவிடுவார்கள்)
மற்ற காவல் நிலையங்களில் இருந்து 18 போலீசார் அதியமான்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வாக்கிடாக்கியை பறிகொடுத்த ஏட்டு சின்னப்பையனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications