திருச்சி-பெங்களூர் ஏர்டெக்கான் புதிய விமான சேவை
Subscribe to Oneindia Tamil

கிங் பிஷ்ஷர் நிறுவனத்துடன் இணைந்துவிட்ட டெக்கான் ஏர்வேஸ் வரும் மார்ச் 30ம் தேதி முதல் இந்த சேவையை துவக்கவுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராம்கி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தினமும் காலை, மாலை இரு வேளைகளில் இந்த ஏடிஆர் ரக விமானங்கள் இயக்கப்படும்.
தினமும் காலை 6.15 மணிக்கு இந்த விமானம் பெங்களூரில் இருந்து கிளம்பி 7.30க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு 9.15 மணிக்கு பெங்களூர் வந்து சேரும்.
அதே போல இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் இன்னொரு விமானம் இரவு 8.45க்கு திருச்சியை அடையும். அங்கிருந்து இரவு 9.30க்கு புறப்பட்டு 10.30 மணிக்கு பெங்களூர் வந்து சேரும் என்று கூறியுள்ளார் சுந்தரம்.












Click it and Unblock the Notifications