For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் திடீர் பஸ் கட்டணம் உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை- தென்காசி இடையிலான பஸ் கட்டணத்தை சில கண்டக்டர்கள் தாங்களாகவே உயர்த்தியுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

அந்தக் கண்டக்டர்களுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கண்டக்டர்கள் கண்டனம் தெதரிவித்துள்ளனர்.

தென்காசி-நெல்லைக்கு தினமும ஆயிரக்கனக்கானோர் பஸ்களில் பயணம் செய்கின்றனர். இதற்காக அரசு போக்கவரத்து கழகம் மூலம் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில், எல்எஸ்எஸ் மற்றும் லோக்கல் பஸ்களில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு கட்டணமாக 17 ரூபாய் 50 காசுகளுக்கு பதில் 18 ரூபாயாக பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல் பாவூர்சத்திரத்தில் இருந்து ரூ.14.50க்கு பதில் 15ம், ஆலங்குளத்தில் இருந்து ரூ.10.50க்கு பதில் 11ம், தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு 7.50க்கு பதில் 8ம், வசூலிக்கப்படுகிறது.

வழக்கமாக கொடுக்கும் கட்டணத்தில் இருநது 50 காசு அதிகமாக கேட்கிறீர்களே, பஸ் கட்டணம் ஏற்றப்ட்டுள்ளதாக அரசு அறிவிக்கவில்லையே என்று அப்பாவித்தனமாக பயணிகள் கேட்டால், எங்களுக்கு டிப்போவில் இருந்து அதிகாரிகள் உத்தரவிட்டதால்தான் அதிகமாக வசூலிக்கிறோம் என்று கண்டக்டர்கள் கூறுகிறார்கள்.

இதனால் பயணிகள் அதிர்ச்சியும், கடுப்பும் அடைந்துள்ளனர். அதேசமயம், குறிப்பிட்ட சில கண்டக்டர்கள் இவ்வாறு வசூலிப்பதற்கு, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கண்டக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வழக்கமான கட்டணத்தையே வசூலித்து வருகின்றனராம்.

ஆனால் 50 பைசா சில்லறை கொடுப்பதில் ஏற்படும் சிக்கல் காரணமாகவே சில கண்டக்டர்கள் தாங்களாகவே இப்படி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் தலையில் மிளகாய் அரைக்க ஒரு அளவே இல்லையா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X