வெடி மருந்து: இந்து முன்னணி பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி: கேரளாவில் இருந்து வெடி மருந்து கொண்டு வந்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம், மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி குண்டு வெடித்தது.
இது தொடர்பாக தென்காசி போலீசார் 7 பேரை கைது செய்தனர். இந் நிலையில் அமோனியம் நைட்ரேட் வெடி மருந்தை கேரளாவில் இருந்து வாங்கி வந்ததாக கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்த ரத்னசாமியின் மகன் சிவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் கடையநல்லூர் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஆவார்.












Click it and Unblock the Notifications