For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செகந்தராபாத்தில் 14 பாக். உளவாளிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: செகந்தராபாத் ரயில் நிலையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 14 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். அனைவரும் ஐஎஸ்ஐ உளவாளிகள் என போலீஸார் கூறியுள்ளனர்.

செகந்தராபாத் ரயில் நிலையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த அதிரடிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோரக்பூர் ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்த 14 வங்கதேசத்தவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அனைவரும் ஐஎஸ்ஐ உளவாளிகள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட யாரிடமும் முறையான பாஸ்போர்ட், விசா என எதுவுமே இல்லை. செகந்தராபாத்துக்கு வந்த காரணத்தையும் அவர்கள் சரிவர தெரிவிக்கவில்லை. அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X