கர்ப்பிணி அண்ணியை கற்பழித்துக் கொன்ற கொடூரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணன் வெளியூர் சென்ற நிலையில் அவரது 6 மாத கர்ப்பிணி மனைவியை கற்பழித்துக் கொலை செய்துள்ளான் தம்பி. இந்தக் கொடூரம் நேற்றிரவு சென்னையில் நடந்தது.

சென்னை பிராட்வேயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவர் ராம்குமார். இவரது மனைவி ஜெயஸ்ரீ என்ற சுஜாதா (27). கடந்த ஜூன் மாதம் தான் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இவர்கள் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தனர். ஜெயஸ்ரீ இப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ராம்குமாரின் தம்பி கண்ணன் (வயது 26). இவர் வேலை தேடி சென்னை வந்தார். அண்ணன் வீட்டில் தங்கிய அவர், அண்ணனின் நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்ந்தார்.

இந் நிலையில் அண்ணியான ஜெயஸ்ரீ மீது கண்ணனுக்கு காமப் பார்வை விழுந்தது. கடந்த வாரம் அலுவலக வேலையாக ராம்குமார் பெங்களூர் சென்றுவிட, வீட்டில் ஜெயஸ்ரீயும், கண்ணனும் இருந்தனர்.

நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கண்ணன், ஜெயஸ்ரீயிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தார். ஜெயஸ்ரீ தப்ப முயன்றுள்ளார். ஆனால், டிவியின் சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு பலவந்தமாக ஜெயஸ்ரீயை அவர் கற்பழித்துள்ளார்.

ஜெயஸ்ரீ உதவி கேட்டு அலறிய சத்தம் டிவி சத்தத்தால் வெளியில் கேட்கவில்லை. ஒரு வழியாக அவனிடமிருந்து தப்பிய ஜெயஸ்ரீ படுக்கை அறையில் இருந்து ஹாலுக்கு ஓடினார்.

அவர் தன்னைக் காட்டிக் கொடுக்கத்தான் ஓடுகிறார் என்று பயந்து போன கண்ணன், ஜெயஸ்ரீயின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினான்.

இதில் மயங்கிய ஜெயஸ்ரீயை கத்தியால் வயிற்றில் குத்தினான். ரத்தம் கொப்பளிக்க அலறிய ஜெயஸ்ரீ ஹாலில் விழுந்து துடித்தார். நிமிடங்களில் அவர் மரணமடைந்தார்.

இதற்கிடையே வீட்டு உரிமையாளர் மகள் மாடியில் இருந்து டி.வி சத்தம் மிக அதிகமாக கேட்டதால் ஜெயஸ்ரீயைப் பார்க்க மாடிக்கு சென்றார். அங்கு ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு வீட்டுக்கு ஓடி போலீசாருக்கு தகவல் தந்தார்.

இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

கண்ணனிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான். இதையடுத்து அவனை போலீசார் தங்கள் ஸ்டைலில் விசாரிக்கவே நடந்ததை ஒப்புக் கொண்டான்.

இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டான். ஜெயஸ்ரீயை, கண்ணன் கற்பழித்ததற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.

ஜெயஸ்ரீ உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பெங்களூர் சென்றுள்ள ராம்குமார், மற்றும் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+