For Daily Alerts
Just In
திருச்சியில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
திருச்சி: திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம பிரசார பரிஷத்தும், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீரங்க சேவா டிரஸ்ட்டும் இணைந்து வருகிற மார்ச் 16ம் தேதி திருச்சியில், ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்தவுள்ளன.
இதுகுறித்து ஸ்ரீரங்க சேவா டிரஸ்ட் தலைவர் பத்ரிநாராயணன், செயலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடு முழுவதும் இந்த திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதி வெங்காடஜலபதியின் திருக்கல்யாண உற்சவத்தை நாட்டு மக்கள் அனைவரும் காண வேண்டும், அவரது அருள் பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் இந்த வைபத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைத் தலைவர் கருணாகர ரெட்டி உள்ளிட்ட 140 பேர் திருப்பதியிலிருந்து திருச்சி வருகின்றனர் என்றார்.
Comments
Story first published: Tuesday, February 19, 2008, 11:57 [IST]