தேசிய விருது: பரிசு தொகை கிடுகிடு உயர்வு
டெல்லி: தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தரப்படும் பரிசுத் தொகையை ஐந்து மடங்காக மத்திய அரசு அதிகரித்துள்ளது. தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த திரைப்படக் கலைஞர்கள், திரைப்படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கிறது. இந்த விருதுகளுக்கான பரிசுத் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து தற்போது பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சிறந்த பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஸ்வர்ண கமல் (தங்கத் தாமரை) விருதுக்குரிய பரிசுத் தொகை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திரைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிறந்த நடிகர், நடிகை, சிறந்த பாப்புலர் படம், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம், சிறந்த இயக்குநர், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பின்னணிப் பாடகர், பாடகி உள்ளிட்ட அனைத்து விருதுகளுக்குமான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் இந்த பரிசுத் தொகை உயர்வு அமலுக்கு வருகிறது. 2006ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர்களுக்கும் இந்த உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications