458 ஊராட்சிகளுக்கு இன்று இடைத் தேர்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் 458 உள்ளாட்சி காலியிடங்களுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது.
ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மரணம், ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு காலியிடங்கள் ஏற்பட்டன. இவற்றுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதில் பல இடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 458 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இவற்றில் நகர்ப்புறங்களில் உள்ள வார்டுளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. மற்ற இடங்களில் வாக்குச் சீட்டு அடிப்படையில்வாக்குப் பதிவு நடக்கிறது.
கோவை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்பட வாக்குப் பதிவு நடக்கும் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.