For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் சுமத்ரா தீவின் அச்சே பகுதியில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி பீதி பரவியது. ஆனால், நிலத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சுனாமியால் மிக பயங்கரமாக பாதிக்கப்பட்ட பகுதி இது. இங்கு மட்டும் 1.8 லட்சம் பேர் பலியாயினர்.

இந் நிலையில் அந் நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 3.08 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை. கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டால் தான் சுனாமி அபாயம் ஏற்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X