வள்ளுவர் சிலைக்கு படகு சர்வீஸ் நிறுத்தம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு உலக புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை உள்ளது.
இந்த சிலையை ஆர்வமுடன் காண தமிழகம், மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட வருவது வழக்கம்.
கடந்த இரண்டு தினங்களாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, திருவள்ளுவர் சிலை உள்ள பாறையில் சுற்றுலா பயணிகளை ஏற்றி, இறக்க அமைக்கப்பட்டுள்ள படகு தளம் அலைகளின் சீற்றம் காரணமாக சேதமடைந்துள்ளது.
இதை சீரமைத்து வருவதால் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
இதனால் கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்க்க வரும்பும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications