மன்னாரில் கடும் சண்டை-95 பேர் பலி: சில பகுதிகளை மீட்டது ராணுவம்?

மன்னார் மற்றும் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இலங்கை விமானப்படை குண்டு வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
வட மேற்கு மன்னாரில் உள்ள அடம்பன் பகுதியில்தான் தாக்குதல் கடுமையாக இருந்தது.
மன்னாரின் பரப்பகந்தல் பகுதியில் 30 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனராம். பாலைக்குழி பகுதியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மொத்தமாக 92 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத் தரப்பில் 3 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடத்தல்:
இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்படவிருந்த மருத்துவப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் என்ற கடலோர கிராமத்தில் சோகையன்தோப்பு என்ற இடத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருவரை நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பரமக்குடியைச் சேர்ந்த அப்துல்லா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பது தெரிய வந்தது.
ஆனால் அவர்கள் பேச்சில் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை போலீஸார் பறிமுதல் செய்னர். இந்த சமயத்தில் ஒரு மாருதி வேன் வந்தது.
அதையும் தடுத்து போலீஸார் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர். வேனில், காரன்வலசை என்ற ஊரைச் சேர்ந்த நவாஸ்கான், முகம்மது இப்னு என்பது தெரிய வந்தது.
வேனில், 5 டாக்டர் கோட், 5 தொப்பி, 5 சுடிதார், 5 பேர் அன்ட் லவ்லி ஆகியவை இருந்தன.
இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, விடுதலைப் புலிகளுக்கு கடத்த இவற்றைக் கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் பல பொருட்களை அவர்கள் கடத்தி வருவதும் தெரிய வந்தது. அந்த வேனில் உர மூட்டைகளும் இருந்தன.
பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications