சென்னை: ஜெயப்ரதா தியேட்டர்களின் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு

நடிகை ஜெயப்பிரதாவுக்குச் சொந்தமாக சென்னை அண்ணா சாலையை ஒட்டி இரு தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு சொத்து வரியாக சென்னை மாநகராட்சி ரூ. 20 லட்சம் வரி விதித்தது.
ஆனால் இந்த வரியை தியேட்டர் நிர்வாகம் கட்டவில்லை. இதையடுத்து மாநகராட்சி சார்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலில் தியேட்டர் நிர்வாகத்திற்குச் சாதகமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தடை உத்தரவு நீக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தியேட்டர்களுக்குள் இருக்கும் பொருட்களை மாநகராட்சி வரி பாக்கிக்காக ஜப்தி செய்ய மாநகராட்சிக்கு முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து ஜப்தி தொடர்பான நீதிமன்றத்தின் வாரண்ட் உத்தரவுடன் மாநகராட்சி ஊழியர்கள் தியேட்டர்களுக்குச் சென்றனர். ஆனால் அவற்றை யாரும் வாங்கவில்லை.
இதையடுத்து தியேட்டர் வாசலில் வாரண்ட்டை ஒட்டிவிட்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications