பணம் வைத்து சூதாட்டம் அரசு அதிகாரிகள் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை ஹோட்டல் அறையில் பணம் வைத்து சூதாடிய அரசு அதிகாரிகள் உள்பட 21 பேர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சிக்கினர்.
இதுகுறித்து நெல்லை டவுன் கமிஷனர் ஞானசேகரன் கூறுகையில், நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சில இடஙக்லில், பிரபல ஹோட்டல்களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக புகார் வந்தது.
அதை தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவுப்படி நள்ளிரவில் நெல்லை ஹோட்டல்கள், லாட்ஜ்களில் சோதனை நடந்தது.
அப்போது ஒரு ஹோட்டலில் பணம் வைத்து சூதாடியது கும்பல் பிடிபட்டது. அவர்களிடமிருந்து ரூ.27,600 பறி்முதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களில் அரசு அதிகாரிகள் சிலரும் அடங்குவர் என்றார்.












Click it and Unblock the Notifications