கர்நாடக மக்களை விமர்சிக்கவில்லை-லாலு

Subscribe to Oneindia Tamil

Lalu Prasad Yadav
டெல்லி: கர்நாடக மக்களை நான் விமர்சித்ததாக பத்திரிக்ைககள் தவறான செய்தியை வெளியிட்டு விட்டன. கர்நாடக மக்கள் மீதும், கன்னட மக்கள் மீதும் நான் உயர்ந்த மரியாதை வைத்துள்ளேன் என்று மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இன்று லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்பு கர்நாடகத்தைச் சேர்நத் பாஜக எம்.பி. அனந்தகுமார் எழுந்து, கன்னட மக்கள் அழுக்குப் படிந்தவர்கள் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ரயில்வே வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து லாலு பேசுகையில், நான் பெங்களூர் வந்தபோது பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு நான், இதுபோன்ற தேவையில்லாத, அழுக்கான விஷயங்களை எழுப்ப வேண்டாம் என்றேன். அதை திரித்து பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு விட்டன என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கர்நாடகத்தின் மீதும், கன்னட மக்கள் மீதும் நான் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளார். எனவே கர்நாடகத்தை நான் குறைத்துக் கூறவில்லை, பேசவில்லை என்றார் லாலு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+